இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் பதவிக் காலம் நிறைவு..?

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஜூன் மாத இறுதியில் மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்கு புதிய ஒருவரை நியமித்தல் அல்லது தற்போதைய ஆளுனரன் பதவிக் காலத்தை நீடித்தல் ஆகிய இரண்டு நடவடிக்கைகளில் ஒன்றை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது பற்றிய தீர்மானத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

மத்திய வங்கி ஆளுனர் ஒருவரின் ஒரு பதவிக் காலம் ஆறு ஆண்டுகளாகும்.

புதிய ஆளுனர் ஒருவரை நியமிக்க இடமளிக்கும் நோக்கில் அஜித் நிவாட் கப்ரால் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதன் போது கப்ரால் நான்கரை ஆண்டு காலம் பதவி வகித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் போது எஞ்சியுள்ள பதவிக் காலத்திற்கே அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

அர்ஜூன் மகேந்திரன் பதவியைப் பொறுப்பேற்றுக்கொண்டது முதல் சில தரப்பினர் கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர். இவ்வாறான பின்னணியில் புதிய ஒருவரை ஜனாதிபதி ஆளுனராக நியமிப்பாரா அல்லது பிரதம ரணில் விக்ரமசிங்கற்கு நெருக்கமான அர்ஜூன் மகேந்திரன் தொடர்ந்தும் பதவி வகிப்பாரா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -