கிழக்கு மாகாண சபையில் இன்று உறுப்பினர்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன..!

கிழக்கு மாகாண சபையின் விசேட சபை அமர்வு இன்று (04.05.2016) காலை 10 மணியளவில் சபை தலைவர் சந்திரதாச கலப்பதி தலைமையில் ஆரம்பமானது. இந்த சபை அமர்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். 

இச் சபை அமர்வின் பின்னர் கிழக்கு மாகாண சபை முன்றலில் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் .

இணைந்த வட, கிழக்கு மாகாண சபை பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபையில் கடந்த எட்டு ஆண்டு காலப்பகுதிக்குள் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் இன்று புதன்கிழமை அம்மாகாண சபையில் காட்சிப்படுத்தப்பட்டன.

இதன்போது 2008.05.10 அன்று முதல் 2012.06.27 வரையான ஆட்சிக்காலப் பகுதியில் கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகித்தவர்களின் புகைப்படங்களை கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாச கலப்பதி திரைநீக்கம் செய்து வைத்தார். 

2012.09.17 முதல் இன்றுவரை ஆட்சியிலிருக்கும் உறுப்பினர்களின் புகைப்படங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்; நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் திரைநீக்கம் செய்து வைத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -