தமி­ழர்­களின் பலத்தை த.தே.கூ. உறுதி செய்ய வேண்டும் - லோக­நாதன்

கஜரூபன்-
டக்கு, கிழக்கு தமிழர் தாய­கத்தில் வாழும் தமி­ழர்­களின் அர­சியல் பல­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளது. இந்­நி­லையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை பிள­வு­ப­டுத்தும் வகையில் இக்­கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி தனது மேலா­திக்­கத்­தினை செலுத்தி தன்­னிச்­சை­யான பல முடி­வு­களை எடுத்து அதனை அரங்­கேற்றி வரு­கின்­றமை ஆரோக்­கி­ய­மான விட­ய­மல்ல.

இந்­நிலை இனி­வரும் காலங்­களில் தொடர விடாமல் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் சகல பங்­காளிக் கட்­சி­க­ளையும் அர­வ­ணைத்துச் செல்லும் பொறுப்பும் கட­மையும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தனுக்கே உள்­ளது. இவ்­வாறு அகில இலங்கை மக்கள் ஜன­நா­யக கட்­சியின் தலை­வரும் தொழிற்­சங்­க­வா­தி­யு­மான எஸ்.லோக­நாதன் விடுத்­துள்ள ஊடக அறிக்­கையில் சுட்டிக் காட்­டி­யுள்ளார்.

இவ்­வ­றிக்­கையில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது, 

வடக்கு கிழக்கை மைய­மாகக் கொண்டு தொழிற்­பட்டு வந்த சகல தமிழ் அர­சியல் கட்­சி­க­ளையும் தத்­த­மது கட்­சி­களின் கொள்­கைகள், கோட்­பா­டுகள் என்­ப­வற்­றுக்­கப்பால் பொது­நோக்கின் அடிப்­ப­டையில் தமி­ழர்­களின் அர­சியல் பலத்தை உல­க­றியச் செய்யும் வகை­யிலும் ஒன்­று­பட்ட சக்­தி­யாக தமி­ழர்கள் ஓர­ணியில் திரண்­டுள்­ளார்கள் என்­பதை உணர்த்­தவும் உரு­வாக்கம் பெற்­றதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பாகும்.

பிர­பல ஊட­க­வி­ய­லா­ள­ரான அமரர் டி.சிவராம் – கிழக்­கி­லங்கை செய்­தி­யாளர் சங்­கத்தின் தலை­வ­ராக ஏ.எல்.எம்.சலீம் பதவி வகித்த காலத்தில் இச் சங்­கத்தின் உறுப்­பி­னர்­க­ளான நாட்டுப் பற்­றாளர் ஜி.நடேசன், இரா. துரை­ரெட்ணம், சண், தவ­ராசா, எஸ்.ஜெயா­னந்த மூர்த்தி, பா.அரி­ய­நேத்­திரன், செல்­லையா, பேரின்­ப­ராசா, த.வேத­நா­யகம், உத­ய­குமார் போன்­றோரை அழைத்து இச்­சங்­கத்தின் மூல­மாக பிரிந்து செயற்­பட்ட சகல தமிழ் அர­சியல் கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை தோற்­று­வித்தார்.

அமரர் டி.சிவராம் என்ன நோக்கம் கருதி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை தோற்­று­வித்தார் என்­பதை மறந்­த­வர்­க­ளாக இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சி­யினர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் மேலா­திக்கம் செலுத்­து­வ­தையும் தன்­னிச்­சை­யான முடி­வு­களை மேற்­கொள்­வதும் டி.சிவ­ரா­மிற்கு செய்யும் துரோ­க­மாகும்.

சமீ­பத்தில் யாழ். மரு­தனார் மடத்தில் இடம்­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மே தினக் கூட்­டத்தில் இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியை தவிர இக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்­கின்ற ஏனைய பங்­கா­ளிக்­கட்­சி­க­ளான புௌாட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்­சி­களின் தலை­வர்­களும் உறுப்­பி­னர்­களும் பங்கு கொள்­ளாமை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மை­விட்ட பாரிய தவ­றா­கவே நோக்க வேண்­டி­யுள்­ளது. 

தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை பெற்றுக் கொள்­வ­தற்­கான காலம் கனிந்­துள்ள நிலையில் சகல தமிழ் அர­சியல் கட்­சி­களும் ஒரு கயிற்று நார் போன்று ஒன்­று­பட்ட சக்­தி­யாக இல்­லாது போனால் அதன் தாக்கம் அல்­லது பாதிப்பு என்­ன­வாகும் என்­பதை கூற வேண்­டி­ய­தில்லை.

ஒரு தந்­தையின் நிலையில் அர­சியல் அனு­ப­வமும் முதிர்ச்­சியும் கொண்­ட­வ­ராக விளங்கும் இரா.சம்­பந்தன் எக்­கா­ரணம் கொண்டும் எமது பலம் சிதை­வ­டையா வண்ணம் தமி­ழர்­களின் பலத்தை உறுதி செய்ய வேண்டும். கடி­வாளம் அற்ற குதி­ரையைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பய­ணிக்­காது நிதா­ன­மாக எமது மக்­களின் எண்­ணங்கள், அர­சியல் அபி­லா­ஷைகள் ஈடேறும் வரையும் விட்­டுக்­கொ­டுப்பு, சகிப்புத் தன்­மை­யுடன் பங்­காளி கட்­சி­களை அர­வ­ணைத்து பய­ணிக்க வேண்டும்.

கிழக்கு மாகாண சபைக்­கான தேர்தல் முடிந்த பின்னர் எதிர்க்­கட்­சியில் இருந்து, ஆட்சி மாற்­றத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆளும் கட்­சி­யாக மாறிய வேளையில் தனக்கு கிடைத்த இரண்டு மாகாண அமைச்­சுக்­க­ளையும் இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி பங்கு போட்டுக் கொண்­ட­மையும், இன்று இந்த மாகாண அமைச்­சர்கள் செயல்­திறன் அற்­ற­வர்­க­ளா­கவும், தமி­ழர்­களின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளையும், தேவை­க­ளையும் நிறை­வேற்றிக் கொடுக்க முடி­யா­த­வர்­க­ளா­கவும் உள்­ளதை கண்டு கவ­லை­ய­டைய வேண்­டி­யுள்­ளது.

கடந்த 23 வருட கால­மாக தமிழ்த் தேசி­யத்­திற்­காக எமது தொழிற்சங்கம் சார்பில் பல போராட்டங்களை முன்னெடுத்தவன் என்ற வகையில் தமிழர்களிடையே வேற்றுமையை களைந்து ஒற்றுமை நிலவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன்.

எனவே, இலங்கை தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லாமல் செயற்பட்டால் நாம் பாரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என்றும் குறிப்பிடப்­பட்­டுள்­ள­து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -