பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவதை ஊடாக மேற்கொள்ளப்படும் பெண்கள் துஷ்பிரயோகத்தை நீக்குவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவுள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்.
இதன்பொருட்டு பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, உயர் கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், களனி பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் என்ற வகையில் தான் கவலையடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்