புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் சட்டத்தரணிகளின் அதிரடி முடிவு...!

பாறுக் ஷிஹான்-
வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்கள் சார்பில் தமிழ் சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகப் போவதில்லை என்று ஒருமித்த முடிவினை சட்டத்தரணிகள் சமூகத்தினர் எடுத்துள்ளனர்.

சட்டத்தரணிகளினால் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவானது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை ஏற்படுத்தியுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் இறுதியாக கைது செய்யப்பட்ட 11,12 ஆவது சந்தேக நபர்களுடைய வழக்கு விசாரணை புதன்கிழமை (04) மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இவ்வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சந்தேக நபர்கள் இருவர்களிடத்திலும் உங்கள் சார்பில் சட்டத்தரணிகள் யாரையும் நியமிக்கவில்லையா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த இரு சந்தேக நபர்களும் வித்தியாவின் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் என்றவுடனேயே எங்கள் சார்பில் தாங்கள் ஒரு போதும் ஆஜராகப்போவதில்லை என்று தமிழ் சட்டத்தரணிகள் சொல்லுகின்றார்கள்.

இதனால் எங்களால் சட்டத்தரணிகளை நியமிக்க முடியவில்லை என்று சந்தேக நபர்கள் இருவரும் நீதவானிடம் தெரிவித்திருந்தனர்.

இதன் போது மன்றில் இருந்த சட்டத்தரணிகளான இ.சபேசன், ரங்கன் ஆகிய இரு சட்டத்தரணிகளிடமும், இவ்வழக்கின் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜராவதில்லை என்று தீர்மானம் எதுவும் எடுத்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த மேற்படி இரு சட்டத்தரணிகளம் நாங்கள் எங்களுடைய மனச்சாட்சியின் படி வித்தியாவின் வழங்கின் சந்தேக நபர்களுக்கான ஆஜராகப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளோம்.

பெரும்பாலும் ஏனைய சட்டத்தரணிகளும் இந்த முடிவிலேயே இருக்கின்றார்கள் என்று நீதவானிடம் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்.

சட்டத்தரணிகளின் கருத்தினை செவிமடுத்த நீதவான், சந்தேக நபர்கள் சார்பில் உள்ள உண்மைகள் சிலவற்றினை தெரிவிப்பதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். எனவே இது தொடர்பாக ஆராய்ந்து முடிவ எடுங்கள் என்றும் நீதவான் சட்டத்தரணிகள் இடத்தில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -