நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உகண்டாவிற்கு விஜயத்தை மேற்கொள்ள இருந்த யோஷிதவின் வேண்டுகோளை கடுவலை நீதிமன்றமே நிராகித்துள்ளது.
மேலும் யோசித்தவிற்கு பிணை வழங்கியது கொழும்பு உயர் நீதிமன்றம் என்ற அடிப்படையினாலேயே மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுட்டுள்ளது.
இதனடிப்படையில் இவர் கொழும்பு உயர் நிதிமன்றிலேயே மனு தாக்கல் செய்திருக்க வேண்டும் எனவும் கடுவலை நீதவான் தம்மிக்க ஹேமபால இன்று தெரிவித்துள்ளார்.
சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு வருவதானாலேயே இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.