தாய்மையின் மேன்மை...!


தையல் அவள் 
தைக்காத தையலும் 
இல்லை அவளை 
தைக்காத வறுமையுமில்லை..

பொய்யாக நடிப்பதுமில்லை 
பொல்லார் சொல் கேட்பதுமில்லை 
மெய் சிலிர்க்கும் அவளின் 
அன்பினில் நனைகையில்..

மங்கையாய் மடந்தையாய் 
இருந்தாலும் பேதையவளும்
பெருமையடைகிறாள் 
தாய்மையினை அடைகையில்...

தாரமாய் அவதாரமாய் 
நல்ல சேவகியாய் 
வாழ்க்கை துணையாய் 
எத்தனையோ பாத்திரம் ....

கோபமும் பாசமும் 
கொஞ்சும் அழகும் 
கெஞ்சும் எம் நெஞ்சம் 
தாயிடமிருந்து பெற்றிடவே...

வெற்றியும் தோல்வியும் 
வாழ்வின் வறுமையும் 
உணரும் வெறுமையும் 
தொலைந்தே போகும் தாய்மடியில்..

அம்மம்மா எத்தனைதான்
உன் பெருமை 
அத்தனைக்கும் கவிபாட 
அவதரிப்பேனோ
நானும் ஒரு தாயாய்...

வார்த்தைக்கு பஞ்சம் 
அதனால் கொஞ்சம்
கவிபாடி முடிக்கும் 
என் நெஞ்சம் ...

வாழ்க தாய்மை வாழ்க பெண்மை...
இப்படிக்கு றிஸ்லி சம்சாட்...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -