புனித ரமழான் மாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஜனாதிபதி மைத்திரியின் உத்தரவு..!

தேர்தலுக்காக முஸ்லிம்களின் சமய கடமைகள் பாதிக்­கப்­படக் கூடா­தெ­னவும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை முஸ்­லிம்­களின் புனித மாத­மான ரம­ழானில் நடாத்த வேண்டாம் எனவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­விட்­டுள்ளார்.

மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கே ஜனா­தி­பதி இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார்.

எதிர்­வரும் ஜூன் மாதம் முஸ்­லிம்­களின் புனித கட­மை­களில் ஒன்­றான நோன்பு நோற்கும் ரமழான் மாத­மா­கையால் அம்­மா­தத்தில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடாத்த வேண்டாம் எனவும் தேர்­தலை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதத்­துக்கும் பின்பு நடத்­து­மாறும் மாகாண சபைகள், உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபாவிடம் உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார்.

முஸ்­லிம்­களின் இரவு நேர தராவீஹ் தொழுகை உட்­பட விசேட மத கிரி­யை­க­ளுக்கு இதனால் பாதிப்பு ஏற்­ப­டு­மெ­னவும் ஜனா­தி­ப­தி தெரி­வித்­துள்ளார்.
து தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பாவைத் தொடர்பு கொண்டு வின­வி­ய­போது, அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்,

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் ஜூனில் நடாத்­தப்­ப­டு­வ­தற்கே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. எல்லை நிர்­ணய முறைப்­பா­டு­களும் துரி­த­க­தியில் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

எல்லை நிர்­ணய அறிக்­கையை ஏப்ரல் மாதத்தில் கைய­ளிப்­ப­தற்கு அதற்­கென நிய­மிக்­கப்­பட்ட குழு திட்­ட­மிட்­டுள்­ளது.

எதிர்­வரும் ஜூன் மாதம் முஸ்­லிம்­களின் புனித நோன்பு மாத­மா­கையால் ஜூனில் தேர்­தலை நடாத்­த­வேண்­டா­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன என்னை வேண்­டி­யுள்ளார்.

அதனால் எதிர்வரும் ஜூனில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடாத்தப்படமாட்டாது. தாமதித்தே நடாத்தப்படும் என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -