பசீரின் கடி­தத்தின் மூல­மாக கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள உள்­ளக முரண்­பா­டுகள் வலுப் பெற்­றுள்­ளது...!

மு.காவிற்குள் ஏற்­பட்­டுள்ள உள்­ளக முரண்­பா­டுகள் அக்­கட்­சியின் தவி­சாளர் பசீர் சேகு­தாவூத் உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளுக்கு எழு­தி­யுள்ள கடி­தத்தின் மூல­மாக உச்­சக்­கட்­டத்தை அடைந்­துள்­ள­தென்­றுதான் சொல்­லுதல் பொருத்­த­மாகும்.

மெல்ல ஆரம்­பித்த கருத்து முரண்­பா­டுகள் தேசி­யப்­பட்­டியல் எனச் சுற்­றி­வ­ளைந்து செய­லா­ள­ருக்­கு­ரிய அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்­டு­மென்று சூறா­வ­ளி­யாக மாறிக் கொண்­டி­ருந்த சூழலில் பசீர் சேகு தாவூத் எழு­திய உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளுக்­கான கடி­தத்தின் மூல­மாக கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள உள்­ளக முரண்­பா­டுகள் வலுப் பெற்­றுள்­ளது. தற்­போது இந்த முரண்­பாட்டுப் பிரச்­சி­னையை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்­காக குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

மு.காவின் முன்னாள் செய­லாளர் டாக்டர் ஹப்ரத், முன்னாள் தவி­சாளர் ஏ.எல்.எம்.அதா­வுல்லா மற்றும் உயர்­பீட உறுப்­பி­னர்கள் சிலரும் இணைந்து கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்­கீமை மாற்­று­வ­தற்கு எடுத்துக் கொண்ட முயற்­சிகள் தோல்­வியில் முடி­வ­டைந்­தது. அத்­துடன் ஹப்ரத், அதா­வுல்லா போன்­ற­வர்கள் கட்­சி­யி­லி­ருந்து விலகிச் சென்­றார்கள். இது போன்று பல உள்­ளக முரண்­பா­டு­களை மு.கா சந்­தித்துக் கொண்­டது. அம்­மு­ரண்­பா­டு­களின் போது இன்று ஏற்­பட்­டுள்ள சிக்­கல்கள் ஏற்­ப­ட­வில்லை.

இத்­த­கைய பிரச்­சி­னைகள் ஏற்­பட்ட போது இன்­றைய உள்­ளக முரண்­பாட்­டிற்கு தலைமை தாங்கிக் கொண்­டி­ருக்கும் மு.காவின் பொதுச் செய­லாளர் எம்.ரி.ஹஸன்­அலி, தவி­சாளர் பசீர் சேகு தாவூத் ஆகி­யோர்கள் தலைவர் ரவூப் ஹக்­கீமின் தலைமை பத­வியை பாது­காத்துக் கொள்­வ­தற்­காக தோழ் கொடுத்­தார்கள்.

அன்று ஏற்­பட்ட முரண்­பா­டுகள் மு.காவின் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கு எதி­ரா­ன­தா­கவே இருந்­தன. இதன் போது தலை­வ­ரோடு முரண்­பட்­டுள்­ள­வர்கள் பத­வி­க­ளுக்­கா­கவே தலை­வ­ருக்கு எதி­ராக முரண்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்று ஹஸன்­அலி, பசீர் சேகு­தாவூத் முதல் அதி­க­மான உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளி­னாலும் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கும் நாட்­டிற்கும் தெரி­விக்­கப்­பட்­டன.

அதனை நிரூ­பிக்கும் வகையில் மு.காவி­லி­ருந்து பிரிந்து சென்­ற­வர்கள் தனிக் கட்­சி­களை அமைத்து அமைச்சர் பத­வி­க­ளையும் பெற்றுக் கொண்­டார்கள்.

இன்று மு.காவிற்குள் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் ஆரம்­பத்தில் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யுடன் முடிச்சுப் போடப்­பட்­டது. அதில் உண்­மையும் இருந்­தது. ஆனால், போடப்­பட்ட முடிச்­சுக்கள் மெல்­ல­மெல்ல அவிழ்ந்து மு.காவின் பொதுச் செய­லாளர் ஹஸன்­அ­லிக்­கு­ரிய அதி­கா­ரங்­களை குறைத்­தமை அநி­யா­ய­மா­ன­தென்று பல­ராலும் சொல்­லப்­படும் ஒரு நிலையை அடைந்­துள்­ளது.

இவ்­வி­டத்­தி­லி­ருந்து கட்­சிக்குள் தற்­போது ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் நியா­யத்­திற்­கான ஒரு போராட்டம் என்று காட்­டப்­ப­டு­கின்­றது. அத்­தோடு தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கு எதி­ரான போராட்­டமும் அல்ல எனவும் தற்­போ­தைய முரண்­பாட்­டா­ளர்கள் தெரி­விக்­கின்­றார்கள்.

இதனை பசீர் சேகு­தாவூத் தான் எழு­திய கடி­தத்தில் தெளி­வ­தாக வாசிக்கும் நபர் ஏற்றுக் கொள்ளும் மனப் போக்கில் முன் வைத்­துள்ளார். இதற்கு முதல் கட்­சிக்குள் ஏற்­பட்ட முரண்­பா­டு­களின் போது தலைவர் ரவூப் ஹக்­கீமின் பக்­கத்தில் நியாயம் இருந்­தது. அதனால் அவர் பக்கம் நின்று நியா­யத்தை அடைந்­த­தா­கவும், தற்­போது ஹஸன்­அ­லியின் பக்கம் நியாயம் இருப்­ப­தனால் அவ­ருக்கு நியா­யத்தைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு முயற்­சி­களை எடுப்­ப­தா­கவும் பசீர் சேகு­தாவூத் தமது கடி­தத்தில் தெரி­வித்­துள்ளார்.

இதே வேளை, பசீர் சேகு­தா­வூத்தின் பல வியாக்­கி­யா­னங்­க­ளுக்கு தாறு­மா­றாக வெளுத்துக் கட்­டி­ய­வர்கள் அவர் எழு­திய உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளுக்­கு­ரிய கடிதம் குறித்து வாயைக் கூட திறக்­காது மௌனித்துப் போயுள்­ளார்கள். தங்­க­ளது மௌனத்தின் மூல­மாக பசீர் சேகு­தா­வூத்தின் கடித உள்­ள­டக்கம் உண்­மை­யென்று ஏற்றுக் கொண்­டுள்­ளார்கள். 

பசீர் சேகு­தாவூத் எழு­தி­யுள்ள கடி­தத்தில் எந்­த­வொரு இடத்­திலும் ரவூப் ஹக்­கீமை நேர­டி­யாக குற்றம் சுமத்­த­வில்லை. கட்­சிக்கு துரோகம் செய்­த­வர்கள் பற்­றியும், செய­லா­ளரின் அதி­கா­ரங்கள் குறைத்­தமை ஒரு நாடகம் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். மு.கா எனும் கட்சி முஸ்­லிம்கள் உயிர் இழப்­புக்­க­ளி­னாலும், இடப்­பெ­யர்­வி­னாலும், துய­ரங்­க­ளி­னாலும் வளர்க்­கப்­பட்­ட­தென்ற உண்­மை­யையும் வெளிப்­ப­டுத்தி உயர்­பீட உறுப்­பி­னர்­களின் மனதைத் தொட்­டுள்ளார்.

இத­னால்தான், பசீர் சேகு­தா­வூத்­திற்கு எதி­ராக பிரம்­பெ­டுத்து சுழற்றிக் கொண்­டி­ருந்­த­வர்கள் உட்­பட கட்­சியின் அனைத்து உயர்­பீட உறுப்­பி­னர்­களும் அக்­க­டிதம் தொடர்பில் பேசா­தி­ருப்­பதே சிறந்­த­தென்ற எண்­ணத்தில் உள்­ளார்கள் என்று கரு­தவும் இட­முண்டு.

மேலும், பசீர் சேகு­தாவூத் எழு­திய கடி­தத்தில் “ஹக்கீம் – ஹாபிஸ் நஸீர் அஹமட் போட்­டியில் நஸீர் நூற்­றுக்கு நூறு வீதம் பிழை என்­பதை இனங்­கண்டு தலை­வரின் பக்கம் உயிர் கொடுக்க தயாராய் நின்றேன். தலைவர் ஹக்கீம் அவர்கள் ஒரு நாள் கபீல்ட் பொலிஸ் தலை­மை­யக மைதா­னத்தில் உடற் பயிற்­சியில் ஈடு­பட்­டி­ருந்த போது மைதா­னத்­துக்குள் நுழைந்த ஹாபிஸ் நஸீர் தலை­வரைப் பார்த்து உங்­களைத் தொலைக்­காமல் விட­மாட்டேன் என்று சவால் விட்டார்.” என்று தெரி­வித்­துள்­ள­துடன் “ஹஸ­னலி கட்­சியின் ஸ்தாபக உறுப்­பினர். ஆதி முஸ்லிம் காங்­கி­ரஸ்­காரர்.

30 ஆண்­டு­க­ளாக முஸ்லிம் காங்­கி­ரஸை விட்டுப் பிரி­யா­தவர். கட்­சிக்கு தீங்­கி­ழைக்­கா­தவர், இரண்டு தலை­வர்­க­ளுக்கும் தூணாக துணை நின்­றவர். கட்­சியின் எந்த உறுப்­பி­ன­ரோடும் குரலை உயர்த்திக் கூட பேசாத குணக்­குன்று. வேறு எவரும் செய்­தி­ராத, கட்சி தொடங்­கிய காலம் தொட்டு இன்று வரை­யான ஆவ­ணங்­களை சேர்ப்­பதே தனது முதல் பணி என்று அத்­த­னை­யையும் சேக­ரித்து வைத்­தி­ருக்கும் நமது ஆவண ஞானி” என்றும் தெரி­வித்­துள்ளார்.

இதன் மூல­மாக கட்­சிக்கும், தலை­வ­ருக்கும் துரோகம் செய்­த­வர்­க­ளுக்கு கட்­சியில் முக்­கிய பத­வியும், அர­சியல் அதி­கா­ரங்­களும் வழங்­கப்­பட்­டுள்­ளது. அதே வேளை, கட்­சிக்­கா­கவும், தலை­வர்­க­ளுக்­கா­கவும் நம்­பிக்­கை­யுடன் நடந்து கொண்­ட­வர்­க­ளுக்கு கழுத்­த­றுப்­புக்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருப்­ப­தாக சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

ஹஸ­ன­லியை காலி டப்­பா­வாக்கி, செய­லாளர் நாயகம் பதவி அப்­ப­டியே இருக்க யானை தின்ற விளாங்காய் போல அப்­ப­த­வியை வெறும் கோதாக்கி, சாற்றை பிழிந்து எடுத்து சக்­கை­யாக்கி, சம்­பி­ர­தாய பதவி நிலை­யாக இதனைக் கீழி­றக்கி வைக்­கப்­பட்­டுள்­ளது. பிழிந்­தெ­டுத்த சாறு இது­வரை காலமும் உச்ச பீடத்தில் எவ்­வித பத­வி­க­ளையும் வகிக்­கா­த­வரும், அனு­பவம் இல்­லா­த­வ­ரு­மான ஒரு­வ­ருக்கு பரி­ச­ளிக்­கப்­பட்­டுள்­ளது என்றும் தமது கடி­தத்தில் தெரி­வித்­துள்ளார்.

இத­னூ­டாக மன்சூர் ஏ. காதர் கட்­சியின் செய­லாளர் பத­விக்கு பொருத்­த­மற்­றவர் என்று தெரி­வித்­துள்ளார். மறு­வார்த்­தையில் சொன்னால் மன்சூர் ஏ.காதர் அப்­ப­த­வி­யி­லி­ருந்து விலக்­கப்­பட வேண்­டு­மென்று தெரி­வித்­துள்ளார் எனலாம்.

இவ்­வாறு உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளுக்கு மிகவும் நுணுக்­க­மாக கடிதம் எழு­திய பசீர் சேகு­தாவூத் கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள உள்­ளக முரண்­பா­டு­களை தீர்க்­காது விட்டால் கட்சி பிள­வு­ப­டு­மென்றும், எதிர்­வரும் தேர்­தலில் கட்சி பாரிய பின்­ன­டைவை காணு­மென்றும் எச்­ச­ரிக்கை செய்­துள்ளார்.
இதே வேளை, கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள உள்­ளக முரண்­பாட்டை முடி­வுக்கு கொண்டு வர­வேண்­டு­மென்­ப­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு­வினர் தலைவர் ரவூப் ஹக்கீம், பொதுச் செய­லாளர் ஹஸன்­அலி, தவி­சாளர் பசீர் சேகு­தாவூத் ஆகி­யோர்­க­ளுக்­கி­டையே இது­வ­ரைக்கும் ஆறு சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்­டுள்­ளார்கள். இதன் முதற்­கட்­ட­மாக குறிப்­பிட்ட குழு இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்ள கட்­சியின் உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளான மௌலவி ஏ.எல்.எம்.கலீல், மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸ் ஆகி­யோர்­களை கட்­சியில் மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்­டு­மென்று மு.காவின் தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கு வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

மு.காவின் குழு­வினர் மேற்­கொண்ட பேச்­சு­வார்த்­தை­களின் போது ஹஸன்­அலி – பசீர் சேகு­தாவூத் தரப்­பினர் கட்­சி­யி­லி­ருந்து இடை­நி­றுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும். கட்­சியின் பொதுச் செய­லா­ள­ருக்­கு­ரிய அதி­கா­ரங்கள் அனைத்தும் வழங்­கப்­பட வேண்டும். மு.காவின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்­ரப்­பினால் உரு­வாக்­கப்­பட்ட கட்­சியின் யாப்பில் எந்த மாற்­றத்­தையும் ஏற்­ப­டுத்தக் கூடா­தென்றும் கோரிக்­கைளை முன் வைத்­துள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது. இப்­பத்தி எழுதும் வரை இவர்­களின் இக்­கோ­ரிக்­கை­க­ளுக்கு கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்னும் பதி­ல­ளிக்­க­வில்லை என்றும் தெரி­கின்­றது.

ஹஸன்­அலி – பசீர் சேகு­தாவூத் தரப்பில் முன் வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கை­களை மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் நிறை­வேற்றும் போது அது அவ­ருக்கு பலத்த பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தும் என்­பதில் ஐய­மில்லை. கட்­சியின் பொதுச் செய­லா­ளரின் அதி­கா­ரங்­களை குறைத்­தமை, அதனை தொடர்ந்து வந்த பிரச்­சி­னை­க­ளுக்கு முற்றுப் புள்ளி வைப்­ப­தற்­காக அதி­ர­டி­யாக இரண்டு உயர்­பீட உறுப்­பி­னர்­களை இடை­நி­றுத்தி வைத்­தமை போன்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட ரவூப் ஹக்கீம் ஈற்றில் கட்­சியின் செய­லா­ள­ருக்கும், தவி­சா­ள­ருக்கும் முன் தலை குனிந்து விட்டார் என்ற பெறு­மா­னத்தை ஏற்­ப­டுத்தும். இப்­பெ­று­மானம் கட்­சியில் ரவூப் ஹக்­கீ­முக்கு இருக்­கின்ற செல்­வாக்கை பின்­தள்­ளவும் செய்யக் கூடும்.

மறு புறத்தில் இவர்­களின் கோரிக்­கை­களை நிறை­வேற்­றாது போனால் கட்­சியை நடத்திச் செல்­வதில் பாரிய பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­ற­படும். சில வேளை­களில் மு.கா நீதி­மன்­றத்தின் உத­வியை நாட வேண்­டியும் ஏற்­ப­டலாம். மேலும், ஹஸன்­அ­லியை பொதுச் செய­லாளர் பத­வி­யி­ருந்து முற்­றாக தூக்கி வீசவும் முடி­யாது. ஏனெனில், கட்­சியின் அடுத்த பேராளர் மாநாட்­டில்தான் புதிய பொதுச் செய­லா­ளரை நிய­மனம் செய்ய முடியும்.

அத்­தோடு, கட்­சியின் செய­லா­ள­ருக்­கு­ரிய அதி­கா­ரங்­களில் இழு­ப­றி­யி­ருக்கும் போது ஹஸன்­அ­லியை உயர்­பீட உறுப்­பி­னர்­களின் ஆத­ரவைக் கொண்டு நீக்­கினால் கூட பிரச்­சி­னைகள் ஏற்­ப­டவும், நீதி­மன்­றத்­திற்கு செல்­லவும், கட்­சியின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடைக்­கால தடைகள் ஏற்­ப­டவும் வாய்ப்­புக்கள் உள்­ளன. இவ்­வாறு பல சிக்­கல்­க­ளுக்கு மத்­தியில் மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் மாட்டிக் கொண்­டுள்ளார். கடந்த காலங்­களில் தனக்கு முன்னால் பூதா­கரம் கொண்ட பல பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கண்ட ரவூப் ஹக்­கீ­முக்கு தற்­போ­தைய பிரச்­சி­னைக்கு இல­கு­வாக தீர்வு காண முடி­யாது.

கட்­சியின் செய­லாளர் குறித்­தான வழக்­கொன்றை அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் எதிர்­கொண்­டுள்­ளது. இந்த வழக்கு முடியும் வரை அக்­கட்­சி­யினால் சில நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடி­யா­துள்­ளது. இது போன்­ற­தொரு நிலையை மு.காவும் அடைந்து கொள்­ளு­மாயின் அதன் மக்கள் செல்­வாக்கில் சரிவு ஏற்­படும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்­சியின் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக தவி­சாளர் பசீர் சேகு­தாவூத், பொதுச் செய­லாளர் ஹஸன்­அலி ஆகி­யோர்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி ஆலோ­ச­னை­களை பெற்றுக் கொண்டு செயற்­பட்டார். ஆனால், இவர்­களை புறக்­க­ணித்து சட்டம் படித்­த­வர்­களின் ஆலோ­ச­னை­களின் படி கட்­சியின் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்துக் கொண்­ட­த­னால்தான் ரவூப் ஹக்கீம் தலை­யி­டியை சந்­தித்­துள்ளார் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

ஆனால், கடந்த காலங்­களில் ரவூப் ஹக்கீம் பசீர் சேகு­தாவூத், ஹஸன்­அலி ஆகி­யோர்­களின் ஆலோ­ச­னையை மட்­டு­மன்றி சட்­ட­த­ர­ணிகள் சல்மான், நிஸாம் காரி­யப்பர் உட்­பட்ட கட்­சியின் சட்­டத்­த­ர­ணிகள் பலரின் ஆலோ­ச­னைகளையும் பெற்றுக் கொண்­டி­ருந்தார் என்­பதே உண்­மை­யாகும். 

இதே வேளை, பொதுச் செய­லாளர் பத­விக்­கு­ரிய அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்­டு­மென்று போராட்­டங்­களைச் செய்து கொண்­டி­ருக்கும் ஹஸன்­அ­லியை முதலில் தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இருக்­கின்ற முழுக் காலத்­திற்கும் பெற்றுக் கொள்­ளு­மாறு ஹஸன்­அ­லி­யிடம் முரண்­பாட்டை தீர்க்கும் குழு­வினர் கேட்டுக் கொண்­ட­தா­கவும், அதனை ஹஸன்­அலி ஏற்றுக் கொள்­ள­வில்லை என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை ஹஸன்­அ­லிக்கு கொடுத்து கட்­சிக்குள் ஏற்­பட்­டுள்ள உள்­ளக முரண்­பா­டு­களை தீர்க்­கலாம் என்ற எண்­ணத்தில் ஹஸன்­அலி மண்ணைப் போட்­டுள்ளார். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை நான் ஏற்றுக் கொண்டால் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­களும், நாட்டு மக்­களும் தன்னை பதவி ஆசை கொண்­டவன் என்று கரு­து­வார்கள் அந்த பழிச் சொல் எனக்கு வேண்டாம். கட்­சியின் செய­லா­ளரின் அதி­கா­ரங்­கள் சூழ்ச்சி மூல­மாக பறிக்­கப்­பட்­டுள்­ளது.

அதனை மீள வழங்க வேண்­டு­மென்று கேட்­டுள்­ள­தா­கவும் கொழும்புத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

தேசிய பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­விக்­காக என்று தொடங்­கிய போராட்டம் செய­லா­ள­ருக்­கு­ரிய அதி­கா­ரங்கள் வழங்க வேண்­டு­மென்று முடிவு கண்­டுள்­ள­மையால் ஹஸன்­அலி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை பெற்றுக் கொள்­வா­ராயின் அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­விக்­கா­கவே கட்­சியின் தலை­வ­ருடன் முரண்­பட்­டுள்ளார் என்­ப­தா­கி­விடும். ஆதலால், ஹஸன்­அலி தனது போராட்டம் எதற்­காக என்­ப­தனை மக்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் சத்­திய சோத­னையில் உள்ளார். இச்சோதனையில் ஹஸன்அலி அடைந்து கொள்ளும் சித்திதான் கீழ் இறங்கிக் கிடக்கும் அவரின் இமேஜை மேலோங்கச் செய்வதற்கு உதவும்.

ஹஸன்அலி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்க மறுக்கும் இன்றைய பின்னணியில் ரவூப் ஹக்கீம் மற்றுமொரு தலையிடியை எதிர்கொள்வார். அதாவது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கேட்டு பலரும் கொழும்புக்கு படையுடன் தரிக்கலாம். அவர்களை சமாளிக்கும் வேலையை ரவூப் ஹக்கீம் செய்ய வேண்டியேற்படும். 

ரவூப் ஹக்கீம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கும், எதிர்கொள்ளவுள்ள பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணங்களாக தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு டம்மி ஆட்களை நியமித்தமை. அவர்களில் ஒருவரை இன்று வரைக்கும் டம்மி என்று காலம் கடத்திக் கொண்டு செல்கின்றமை. நீண்ட கால நோக்கின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு முடிவு காணாது, குறுகிய கால நோக்கில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்பட்டமை.

பதவிகளின் மேல் மோகம் கொண்டவர்களை தமது ஆலோசகர்களாகக் கொண்டுள்ளமை. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சுய அரசியல் இலாபத்திற்காக முடிவுகளை எடுத்துக் கொண்டமை, தேர்தல் வெற்றியை மாத்திரம் கருத்திற் கொண்டு தேசிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டமை, கட்சியின் கட்டமைப்பை பாதுகாத்துக் கொள்ளாமை, கட்சியின் பிரதேச அரசியல் தலைவர்களின் பிணக்குகளை தீர்ப்பதற்கு முன் வராமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
மூலம்: விடிவெள்ளி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -