இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வரிபத்தான்சேனை மஜீட் புரத்தில் சிவில் பாதுகாப்புக் குழு மற்றும் தமன பொலிஸ் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையானது நேற்று (16) வரிப்பத்தான்சேனை கிராம சேவகர் பிரிவு 3ல் உள்ள கிராமசேவகர் காரியாலயத்தில் தமன பொலிஸ் உதவி பொலிஸ் பரிசோதகர் ஜி.எல்.ஏ.சரத் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் பொலிஸ் சேவை, வைத்திய சேவை என்பன நடைபெற்றன.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இதன் போது இறக்காமம் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் . எம்.ஆர்.எம்.றிஷாட் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஐ.எல்.எம். றசீன், ஆயூர்வேத மருந்த பொறுப்பதிகாரி டாக்டர் பி.எம். றிஸ்வான், கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் விக்கிரமகே ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சுமார் 100 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்னடைந்தார்கள்.
மேலும், இக்கிராம மக்கள் தெரிவிப்பதாவது இவ்வாறான நடமாடும் சேவையானது எங்களுக்கு அளப்பெரிய சேவையாகும். இவ்வாறான நடமாடும் சேவை மூலமே எமது கிராம மக்கள் இலகுவான முறையில் பயனடைகின்றார்கள்.
இவை தொடர்ச்சியாக ஒவ்வொரு கிராம சேவகர்ப் பிரிவிலும் நடைபெறுமானால் இப்பிரதேசத்திலுள்ள பெருபாலான குறைபாடுகளை முற்றாக தீர்த்துக் கொள்ள முடியும் எனத் தெரிவித்ததோடு இந் நடமாடும் சேவையை ஏற்பாடு செய்யத தமன பொலிஸாருக்கு தங்களது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்கள்.