பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு - குழப்ப நிலைக்கு காரணமனவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற குழுப்பநிலை தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதி சபாநாயகர் தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளதாக, சற்றுமுன்னர் அறிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, அக்குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து, பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் காரணமாகவே இந்த குழப்பநிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக சபை நடவடிக்கைகள் நாளை வரை சபாநாயகர் கரு ஜயசூரியவினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -