அப்துல் அஸீஸ்-
கல்முனை தெற்கு பிரதேசத்தின் கல்முனைக்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள நவீன தெரு மின் விளக்குகள் சுமார் மூன்று மாதம்களாக எரியாமல் இருப்பது தொடர்பாக அப்பிரதேச மக்களும், வியபாரநிலைய உரிமையாளர்களும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்.
இவ் நவீன தெரு மின் விளக்குகள் பொருத்தப்பட்டு சுமார் ஒரு வருட காலமே சென்ற நிலையில் இலங்கை மின்சார சபை கல்முனை அலுவலகத்தினால் இத் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டு மின்மாணிப்பெட்டி சீல் இடப்பட்டுள்ளமை தங்களுக்கு வேதனையளிப்பதாக அப்பிரதேச மக்களும், வியபாரநிலைய உரிமையாளர்களும் மேலும் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபை கல்முனை அலுவலக அதிகாரிகளை கேட்டபோது,
கல்முனை தெற்கு பிரதேசத்தின் பிரதான வீதியில் அமைந்துள்ள நவீன தெரு மின் விளக்குகள் பாவனைக்கான கொடுப்பணவுகளை கல்முனை மாநகர சபையே செலுத்த வேண்டும். அதனை இதுவரை செலுத்தாமையினாலே நாங்கள் இவ் மின் துண்டிப்புபை மேட்கொண்டோம் என்றனர்.
இதனை அடுத்து இவ்விடயத்துக்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரியான கல்முனை மாநகர ஆணையாளார் ஜே.லியாக்கத்தலியிடம் இது தொடர்பாக கேட்டபோது,
கல்முனை தெற்கு பிரதேசத்தின் பிரதான வீதியில் அமைந்துள்ள நவீன தெரு மின் விளக்குகள் பாவனைக்கா லெட்சக்கணக்கான ரூபாக்களை இலங்கை மின்சார சபைக்கு கல்முனை மாநகர சபை செலுத்தவேண்டியுள்ளது. அதனை செலுத்தி தெரு மின் இணைப்பை வழங்க நாங்கள் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றோம் எனக்கூறினார்.