ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸனலி ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று நடைபெறவுள்ளது.
இந்த சந்திப்பின்போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
2015 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் நடைபெற்ற கட்சியின் கட்டாய உச்சபீடக் கூட்டம் மற்றும் அதனையடுத்து இடம்பெற்ற பேராளர் மாநாட்டைத் தொடர்ந்து தலைவர் மற்றும் செயலாலருக்கிடையில் இழுபறி நிலை ஆரம்பமானது. செயலாளர் நாயகத்தின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டமையே இருவருக்குமிடையிலான முரண்பாட்டுக்கு பிரதான காரணமெனத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை கட்சியின் மஜ்லிஷுஷ் சூறா தலைவர் ஏ.எல்.எம். கலீல் மௌலவி மற்றும் உலமா காங்கிரஸ் பிரதிநிதி எச்.எம்.எம். இல்யாஸ் மௌலவி ஆகிய இருவரும் கட்சித் தலைமைக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு அவ்விருவரையும் கட்சியின் உயர் பீடத்திலிருந்து இடைநிறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து பாலமுனையில் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் செயலாளர் நாயகம் ஹஸனலி கலந்து கொள்ளவில்லை. இந்த நிலைமையில் கட்சியின் தலைவருக்கும் செயலாளருக்குமிடையில் நீண்ட இடைவெளியின் பின்னர் நடைபெறவுள்ள சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
டெ.சி