சீமெந்துக்கான விலை அதிகரிக்க வாய்ப்பு...!

சீமெந்துக்கான விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் தற்போது கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக, அதிகார சபை மேலும் கூறியுள்ளது. 

சீமெந்து விலையை அதிகரிக்குமாறு உற்பத்தி நிறுவனங்களால் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து அத தெரண வினவியபோதே, அந்த அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

டொலருக்கான விலை அதிகரித்தமை மற்றும் வெட் வரி நூற்றுக்கு 4 வீதமாக அதிகரித்தமை உள்ளிட்ட காரணங்களால் சீமெந்து விலையிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்தின் கீழ் அத்தியவசியப் பொருளாக பெயரிடப்பட்டுள்ள சீமெந்துக்கு 870 ரூபாய் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -