சரத் பொன்சேகாவின் அலுவலகத்தின் மாதாந்த வாடகை எவ்வளவு தெரியுமா..?

மைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் அலுவலகத்தின் மாதாந்த வாடகை ஒரு கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

சரத் பொன்சேகாவின் அமைச்சிற்காக புதிதாக கட்டடமொன்று வாடகைக்கு அமர்த்தப்பட உள்ளதாகவும் இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகளவு மாத வாடகையில் அலுவலகத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ராஜகிரிய பிரதேசத்தில் இந்த அமைச்சின் கட்டடம் இயங்கவுள்ளது.

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அமைச்சரவை பத்திரமொன்றின் ஊடாக முன் வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கட்டடத்தை பயன்படுத்துவதற்கு 24 மாதங்களுக்கு சேவை கட்டணமாக நான்கு கோடியே 22 லட்சம் ரூபாவை செலுத்துமாறு கட்டட உரிமையாளர் நிபந்தனை விதித்துள்ளார். இந்த நிபந்தனையை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக்குழு நிராகரித்துள்ளது.

கட்டட உரிமையாளரின் நிபந்தனைக்கு இணங்குமாறு கோரி சரத் பொன்சேகா மீளவும் யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளார். இதேவேளை கட்டட குத்தகை தொடர்பிலான ஆவணம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -