இ.தொ.காவுடன் மூவர் இணைந்து கொண்டனர்..!

க.கிஷாந்தன்-
லங்கை தொழிலாளர் காங்கிரஸ் 11.05.2016 அன்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழில்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடத்தியது.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து செயல்படபோவதாக கோரி நுவரெலியா பிரதேச சபையின் முன்னால் உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் உறுப்பினருமாக இருந்த பி.ரவிச்சந்திரன், மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் கே.சக்திவேல் ஆகியோருடன் மலையக மக்கள் முன்னணியின் லிந்துலை பிரதேச அமைப்பாளர் கே.ராமமூர்த்தி ஆகியோர் புதிதாக இணைந்து கொண்டனர்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பி.சக்திவேல், கணபதி கனகராஜ், ஏ.பிலிப்குமார், புதிதாக கட்சியில் இணைந்து கொண்ட முன்னால் நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் என்.சதாசிவன், முன்னால் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -