இத்தாலியை சேர்ந்த அனடொலியா வெர்ட்டடெல்லா( வயது 101) என்ற பாட்டிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் உள்ளன, இந்நிலையில்இவருக்கு 48 வயது இருக்கையில், கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சைமூலம் இவரது கர்ப்பப்பை அகற்றப்பட்டது.
ஆனால், இவருக்கு மீண்டும் கருத்தரித்து குழந்தை பெற்றெடுக்க வேண்டும் என ஆசை வந்துள்ளது, தான் பயன்பாடற்று இருப்பதாக உணர்ந்த இவர், எப்படியாவது 17 வது குழந்தையை பெற்றெடுத்திடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
அதன்படியே, தனது 101 வயதில், துருக்கியில்உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உதவியுடன் கருப்பை மாற்றம் செய்து, 9 பவுண்ட்ஸ் எடைகொண்ட குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இதுகுறித்து பாட்டியார் அவர்கள் கண்ணீர் மல்க கூறியதாவது, மருத்துவரீதியில் எனக்கு உதவிய மருத்துவ குழுவினரை நினைத்து பெருமையடைகிறேன்,அதுமட்டுமின்றி கடவுளின் ஆசிர்வாதத்தால் எனக்கு 17 வது குழந்தை பிறந்துள்ளது என கூறியுள்ளார்.