உளவு பார்த்ததாகக் கூறி 11 வயது சிறுவனின் தலையை துண்டித்த துயரம்…!

சிரியாவில் உளவு பார்த்ததாக 11 வயது சிறுவனை ஐஎஸ் அமைப்பினர் தலைதுண்டித்து படுகொலை செய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை கைப்பற்றிய இஸ்லாமிய நாடாக உருவாக்கியுள்ள ஐஎஸ் அமைப்பினர் நாளுக்கு நாள் தலை துண்டிப்பு, கற்பழிப்பு போன்ற மிக கொடூரமான குற்றங்களை செய்து வருகின்றனர்.

இதுதொடர்பான வீடியோக்களை வெளியிட்டும் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சிரியாவின் அலெப்போவில் 11 வயது சிறுவனின் தலையை துண்டித்து படுகொலை செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

சிரியாவின் அரச படைகளுக்கு ஆதரவாக உளவு பார்த்தான் என்ற குற்றத்திற்காக இந்த தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.

முதலில் அந்த சிறுவனை பிடித்து கன்னத்தில் சரமாரியாக அறைந்துள்ளனர், பின்னர் அவனது கைகளை கட்டி டிரக்கின் பின்புறத்தில் படுக்க வைத்து அவனது கழுத்தை அறுப்பது போன்று வீடியோ முடிவடைகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -