மூதூர் பள்ளிவாசலிற்குள் கொலை : மூவருக்கும் 18ஆம் திகதிவரை விளக்கமறியல்

ஏ.எஸ்.எம்.தாணீஸ், எம்.என்.எம்,புஹாரி-

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் ஆஸாத் நகர் மீரா தைக்காப் பள்ளிவாசலில் வைத்து 3 பேர் கொண்ட குழுவினரால் ஆஸாத் நகர் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வாள் வெட்டு தாக்குதலுக்குள்ளாகி உயிர் இழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை இம் மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு மூதூர் நீதிவான் இன்று 08 உத்தரவிட்டார்.

இச்சம்பவம் நேற்று (07) காலை 6.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.இச்சம்பவத்தில் உயிர் இழந்தவர் கே.எம்.நாஸ்கீன் (வயது 39) என தெரியவந்துள்ளது.குறித்த நபர் நோன்பு நோற்றிருந் நிலையில் உயிழ் இந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது குறித்த சம்பவத்தில் இன்று உயிர் இழந்த நபர் அவரது மைத்துனரை கட்டுத் துவக்கினால் சுட்டு கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மூதூர் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மூன்று மாதத்திற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சந்தேகத்தின் பேரில் மைத்துனர்கள் மூவர் கைது செய்யப்பட்டு இன்று மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையிலேயே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -