துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சித்ததை தொடர்ந்து இதுவரையிலும் நடந்த வன்முறைகளில் 194 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 1500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கி நாட்டை ராணுவம் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக நேற்று நள்ளிரவில் திடீரென தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து ஜனாதிபதி ஆதரவு படையினர் எடுத்த தீவிர நடவடிக்கைகளால் வரலாற்றில் முதன்முறையாக ராணுவத்தின் சதி முறியடிக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு நடந்த வன்முறைகளில் இதுவரையிலும் 194 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 1500க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.