காத்தான்குடி நகர சபையின் எல்லைகள் 1987ம் ஆண்டின் வர்த்தமாணியின் பிரகாரம் தெளிவாக வரையறுக்கப்பட்ட வேண்டும்

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

ள்ளுராட்சி மன்றங்களின் மீள் எல்லை நிர்னயம் தொடர்பான தேசிய மட்ட குழுவினரின் பங்குபற்றுதலுடன் நடை பெற்ற மாவட்ட மட்டத்திலான சிறப்பு கலந்துரையாடல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நேற்று (24.07.2016) ஞாயிற்று கிழமை இடம் பெற்றது. 

இதன் பொழுது எல்லை நிர்ணய ஆணைக்குழுவினுடைய தலைவர் அதன் அங்கத்தவர்கள் மற்றும் மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சினுடைய பிரதிநிதிகள் உட்பட பல உயர் அதிகாரிகள் என பரும் வருகை தந்திருந்தனர்.

இதன்போது 21.08.2015 திகதியன்று வெளியான இலக்கம் 1928/28 வர்த்தமானி பிரகாரம் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளிலுள்ள பிரச்சனைகள் சம்மந்தமாக ஆராயப்பட்ட வேலையில் தனது கருத்தினை தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாரூக் புதிய உள்ளூராட்சி மீள் எல்லை நிர்ணயங்களினால் முஸ்லிம்களை பிரதி நிதித்துவப்படுத்தி இதுவரை காலம் மட்டக்களப்பு மாநக சபையில் இருந்து வந்த இரண்டு முஸ்லிம் பிரதி நிதிகளை இழ்க்க வேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தனது நியாயங்களை தெளிவுபடுத்திய பொறியியலாளர் ஷிப்லி பாரூக்.மண்முனை வடக்கு மஞ்சந்தொடுவாய் வட்டாரம் இரட்டை அங்கத்துவ வட்டாரமாக மாற்றப்பட வேண்டும். இல்லாவிடின் அங்கிருக்கின்ற மட்டக்களப்பு மாநகர சபையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்படுகின்ற ஓர் துர்பாக்கிய நிலை ஏற்படும் என்பதனை நான் இங்கு முக்கியமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். புளியந்தீவு வட்டாரம் இரட்டை அங்கத்துவ வட்டாரமாக 2015.08.21 திகதியன்று வெளியான வர்த்தமானியின் பிரகாரம் ஆக்கப்பட்டிருப்பது முற்றிலு நியாயமற்ற விடயமாகும். 

ஏனனில் மனிதர்கள் வாழாத எருமைத்தீவை உள்ளடக்கியதாக இருக்கின்ற பிரதேசமானது இரட்டை அங்கத்தவர் வட்டாரமாக மாற்றப்பட்டிருப்பதானது முற்றுமுழுதாக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தினை இல்லாமல் செய்கின்ற விடயம் தெளிவாக கூறிகொள்ள விருபுக்கின்றேன். ஆகவே மஞ்சந்தொடுவாய் வட்டாரத்தினை இரட்டை அங்கத்துவ வட்டாரமாக மாற்றி முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி தருமாறு எல்லை நிர்ணய மீள் ஆணைக்குழுவினரிடம் வேண்டிக்கொண்டார் பொறியியலாளர் ஷிப்லி பாருக்.

அதுடன் காத்தான்குடி வட்டார பிரிப்புக்கு முன்பாக அதனுடைய எல்லைகள் சரியாக பிரிக்கப்பட வேண்டும் என்றும் காத்தான்குடியினுடைய எல்லைகள் தொடர்பாக 1987.05.12 அன்று வெளியான வர்த்தமானி இலக்கம் 453/18, 1997.07.04 அன்று வெளியான வர்த்தமானி இலக்கம் 58/1092 மற்றும் 1998.12.11 அன்று வெளியான வர்த்தமானி இலக்கம் 1057/16 ஆகியவற்றின் பிரகாரம் அமையப்பெற வேண்டிய எல்லைகளையும் அதன் பரப்பிணையும் பற்றி தெளிவாகவும் விரிவாகவும் வந்திருந்த எல்லை நிர்ணய ஆணைக்குழுவினருக்கு பொறியியலாளர் ஷிப்லி பாரூக் தெளிவுபடுத்தியதுடன் அதற்கான சிறந்த தீர்வினை பெற்றுத்தருமாறு வேண்டிக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -