கட்டாரில் இருந்து விடுமுறையில் வந்த முஹம்மட் சியாம் (வயது 23) மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணம்...!

வை.எம்.ஃபைறூஸ் -
ட்டக்களப்பு திருகோணமலை வீதியில் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் பணிச்சங்கேணிப் பிரதேசத்தில் இன்று (11.07.2016) அதிகாலை 12.20 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை-பிறைந்துரைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த நண்பர்கள் திருகோணமலைக்குச் சென்று வாழைச்சேனைக்கு வந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலயே பணிச்சங்கேணி-சல்லித்தீவுச் சந்தியில் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதி வலைவில் விழுந்ததாலயே இவ்விபத்து நிகழ்ந்திருக்கலாமென்று வாகரைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை சிறாஜ் வீதியைச் சேர்ந்த அசனார் முஹம்மட் சியாம் (வயது 23) என்பவர் மரணமடைந்துள்ளதுடன் பிறைந்துரைச்சேனை பன்சல வீதியைச் சேர்ந்த மையன் இர்பான் வயது – 25 என்பவர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மரணமடைந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, மரண விசாரணையை கோறளைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ரமேஸ் ஆணந்தன் நடாத்தியதுடன், பிரேத பரிசோதனையை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ்.காலித் நடாத்தினார். பின்னர் ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வாகரைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மரணமடைந்தவர் நோன்புப் பெருநாள் விடுமுறைக்காக கட்டாரிலிருந்து நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இவரின் மறுமை வாழ்வுக்காக நாமும் பிரார்த்திப்போம் இன்ஷா அல்லாஹ்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -