புறா திருடிய இருவருக்கு இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

எப்.முபாரக்-

                திருகோணமலை பிரதேசத்தில் எட்டு புறாக்களைத் திருடிய இருவரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.ஜி.விஸ்வனந்த பெர்ணாண்டோ நேற்று புதன்கிழமை(13) உத்தரவிட்டார். திருகோணமலை பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 24வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

 குறித்த சந்தேக நபர்கள் இருவரும் உப்புவெளி பிரதேசத்தில் எட்டு புறாக்களை திருடியதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து செவ்வாய்கிழமை (12) கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் புதன்கிழமை(13) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -