திருகோணமலை பிரதேசத்தில் எட்டு புறாக்களைத் திருடிய இருவரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.ஜி.விஸ்வனந்த பெர்ணாண்டோ நேற்று புதன்கிழமை(13) உத்தரவிட்டார். திருகோணமலை பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 24வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இருவரும் உப்புவெளி பிரதேசத்தில் எட்டு புறாக்களை திருடியதாக உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து செவ்வாய்கிழமை (12) கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் புதன்கிழமை(13) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.