அஷ்ரப் ஏ சமத்-
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் தணியாா் கம்பணி முதலீட்டுடன் நடுத்தர வருமாணம் பெரும் குடும்பங்களுக்காக 500 வீடுகள் கொண்ட தொடா் மாடி வீடமைப்புத் திட்டத்தினை நேற்று (13) கொழும்பு - அத்துருகிரிய-பணகொட என்ற பிரதேசத்தில் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைத்தாா்.
இத்திட்டத்தில் நிர்மாணிக்கப்படும் வீடுகள் 41 இலட்சம் முதல் 50 இலட்சங்களாகும் சகல வசதிகளையும் கொண்ட இவ் வீடமைப்புத்திட்டம் நடுத்தர வருமாணம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும். தேசிய சேமிப்பு வங்கி ஊடாக வீடமைப்புக் கடன் பெற்று இவ் வீடுகளை பெற முடியும். ஏற்கனவே இதுபோன்ற ஒரு வீடமைப்புத்திட்டம் பாணந்துறை வாதுவை பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.