செட்டிபாளையம் சமூக மேம்பாட்டு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மூ.கோ. வின் 50வது அகவை மலர் வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று (30) களுவாஞ்சிகுடி Holiday Resort Inn இல் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் கடமையாற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட பல அரச உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் பிரதம அதிதி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் மூ.கோ. வின் 50வது அகவை மலர் முதற் பிரதியை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் மூ.கோ. வின் 50வது அகவை மலரினை வழங்கி வைத்தார்.
செட்டிபாளையம் சமூக மேம்பாட்டு அமைப்பின் தலைவர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீருக்கு பொண்ணாடை போர்த்தி கௌரவித்தனர்.