6வயது சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை..!

தஞ்சலி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும்ருத்ர சாந்தி யோகாலயம் மூலம் பயிற்சிப் பெற்ற இயைனியா அருண் என்ற 6 வயதே ஆன சிறுமி புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

மூன்று வயது முதலே தன் தாயார் யமுனா தேவியுடன் இணைந்து தினமும் காலை நேரங்களில் யோகா மற்றும் தியானத்தை விளையாட்டாகக் கற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளார் இயைனியா. தற்போது திருச்சியில் வசித்துவரும் அவரை, பெற்றோர் முறையான பயிற்சி அளிக்க யோகரத்னா கிருஷ்ணகுமார் நடத்திவரும் பயிற்சி வகுப்புகளில் சேர்த்துள்ளனர். இதையடுத்து கடந்த ஒரு வாரமாக முட்டை மீது பத்மாசனத்தில் அமர்ந்து பயிற்சி பெற்றிருக்கிறார்.

அண்மையில் திருச்சி சங்கம் ஹோட்டலில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு பத்திரிகையாளர்கள் கூடியிருக்க, மக்கள் முன்னிலையில் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது .ஒரு மேடையில் 30முட்டைகள் கொண்ட தட்டு வைக்கப்பட்டது பின் அதன் மீது சிறுமியை பத்மாசனம் நிலையில் இருவர் தூக்கி அமரவைத்தனர். பிறகு சிறுமி 30நிமிடங்கள் தொடர்ந்து முட்டைகள் மீது அமர்ந்து புதிய சாதனை படைத்தார்.

இதனை தொடர்ந்து பேசிய முனைவர்.அசோகன், ‘இதுவரை யாரும் செய்யாத செயலை செய்து காட்டுவதே சாதனையாகின்றது.முடியும் என்று நினைத்து உரிய பயிற்சிகள் அளித்தால் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்ய முடியும். இவ்வகையில் சிறுமி இயைனியாவின் திறமையைக் கண்டறிந்து வெளிக் கொண்டுள்ள வந்ததில் யோகரத்னா கிருஷ்ணகுமாருக்கு பாராட்டுக்கள்’ என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -