பிரபல இஸ்லாமிய அழைப்பாளர் டொக்டர் ஷாகிர் நாயக் அவர்கள் ஒரு நிமிடத்துக்கு 60 பொய்களை கூறுவதாக கண்டரியப்பட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயளாலர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பில் கூறியுள்ள அவர்..
பீஸ் டி வீ என ஒரு தொலைக்காட்சி உள்ளது அதை ஷாகிர் நாயக் என்ற ஒரு பொய்யர் நடத்துகிறார்.அவர் ஒரு நிமிடத்துக்கு 60 பொய்களை கூறுவதாக கண்டரியப்பட்டுள்ளது. இதை நாம் கூறவில்லை சர்வதேச விமர்சகர்கள் கூறியுள்ளனர். ஷாகிர் நாயக்குக்கு ஷேய்க் ஹசன் பரீத் என்ற சீடர் உள்ளார் அவர் கொழும்பு ராஜகியவில் நிதா பவுண்டேஷன் என்ற பெயரில் காரியாலயம் வைத்து அவரின் இலங்கை முகவராக செயற்படுகிறார்.
இலங்கையில் மதமாற்றம் செய்வதும் இஸ்லாமிய ஷரியா நீதி படித்துக்கொடுப்பதும் தான் இவர்களது பிரதான செயற்பாடு அதை அவர்களது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்கள் என குறிப்பிட்டார்.
மடவளைநியூஸ்