ஷபீக் ஹுஸைன்-
தமிழர் விடுதலைக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் காலம்சென்ற எம். சிவசிதம்பரத்தின் 93 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நினைவு தின நிகழ்வு றே்று (19) யாழ்ப்பாணம் கரவட்டி, தச்சை அறநெறி பாடசாலையில் நடைபெற்றது.
இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சிவசிதம்பரத்தின் நினைவுப் பேருரையும் நல்லிணக்கத்தை ஏற்படுவதில் சவால்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்.
கரவெட்டி கரவைச் தச்சை ஐங்கரன் அறநெறிப்பாடசாலை மண்டபத்தில் கரவெட்டி ஒன்றியத்தின் தலைவர் வி.சி பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற சிவசிதப்பரத்தின் 93ஆவது பிறந்த தின நினைவு நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஓய்வுநிலை மாவட்ட நீதிபதி விக்னாராஜா, அகில இலங்கை இந்து மன்றத்தின் தலைவர் கந்தையா நீல கண்டன், பேராசிரியர் சி.சிவலிங்கராஜா, முன்னாள் தினக்குரல் பிரதஅ ஆசிரியர் தனபாலசிங்கம், சிவசிதம்பரத்தின் புதல்வி கீதாஞ்சலி நிரஞ்சலா உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.