அம்பாறையில் கணவனை வெட்டிக் கொலை செய்த மனைவி...?

ம்பாறை தம்பிலுவில் பிரதேசத்தில் கணவனை கோடரியால் வெட்டிக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் மனைவியை, திருக்கோவில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) இரவு நடைபெற்ற இச் சம்பவத்தில், திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள தம்பிலுவில் 2 பிரிவு ஆலையடி வீதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய தங்கவடிவேல் பார்த்தீபன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடே, இச் சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -