பசில் ராஜபக்ஷ பிணை கோரி மனு தாக்கல்..!

திவிநெகும திணைக்களத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

தனது சட்டத்தரணியூடாக கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள விளக்கமறியல் உத்தரவை திருத்தியமைக்க கோரி இந்த மனுவை பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷ குறித்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாகாமையின் காரணமாக வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாத் 06ம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -