திவிநெகும திணைக்களத்தின் நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிணை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
தனது சட்டத்தரணியூடாக கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள விளக்கமறியல் உத்தரவை திருத்தியமைக்க கோரி இந்த மனுவை பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பசில் ராஜபக்ஷ குறித்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாகாமையின் காரணமாக வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாத் 06ம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.