அய்ஷத்-
அக்கரைப்பற்று கல்வி வலய நிர்வாகத்திற்குட்பட்ட பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலய, பாலமுனை அல் ஹிதாயா வித்தியாலய அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மின்ஹாஜ் மகா வித்தியாலய அதிபராக கடமையாற்றிய எஸ்.எம்.எம்.ஹனிபா பீஏ அவர்கள் பாலமுனை அல்ஹிதாயா வித்தியாலயத்திற்கும், பாலமுனை அல் ஹிதாயா வித்தியாலய அதிபராக கடமையாற்றிய கே.எல்.எம்.உபைத்துல்லா ஜேபீ அவர்கள் மின்ஹாஜ் மகா வித்தியாலயத்திற்கு அதிபராகவும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (2016.07.11) காலை இரு அதிபர்களும் தங்களது புதிய சேவை நிலையத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.