ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கான காணிச் சட்டங்கள் தொடர்பான முழுநாள் செயலமர்வு மூதூர் பிரதேச செயலாளர் கேட்போர் கூடத்தில் (16) மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசூப் தலைமையில் நடைபெற்றது.
இச் செயலமர்வினை சட்டம் மற்றும் சமூக நிதியம் ஏற்பாடு செய்திருந்தது.
மூதூர் பிரதேசத்தில் அதிகமாக காணி தொடர்பான தெளிவிள்ளாமல் மக்கள் இருப்பதோடு, அனேகமான காணிப் பிரச்சினைகளும் உள்ளதால் கிராம மட்ட சிவில் அமைப்புக்களை தெளிவூட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் வளவாளராக உதவி காணி ஆணையாளர் ஆர். ரவிராஜன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.