கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் எதிர்வரும் நாட்களில் கைதுசெய்யப்படலாம் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த முக்கியஸ்தர்களின் பட்டியலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிதிகள் மற்றும் சொத்துக்களை ராஜபக்ஷ கட்டளை நிதியத்திற்கு பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைதுசெய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, விரைவில் முக்கியமான சிலர் கைது செய்யப்பட்வுள்ளதாக பொலிஸ்மா அதிபர் கடந்த வாரம் இப்பாகமுவ பகுதியில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.