சாய்ந்தமருதில் பிரதி அமைச்சர் ஹரீஸினால் கடினபந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிஆரம்பித்து வைப்பு!



ஹாசிப் யாஸீன், அகமட் எஸ். முகைதீன்-

ல்முனைப் பிராந்தியத்தில் கடினபந்து கிரிக்கெட் விளையாட்டின் தாய்க் கழகமானசாய்ந்தமருது பிறேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவையொட்டிசாய்ந்தமருது அஸ்லம் பிக் மார்ட் நிறுவனத்தின் முழு அனுசரணையில் ரீ-10 கடின பந்துகிரிக்கெட் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று (16) சனிக்கிழமை சாய்ந்தமருதுவொலிவேரியன் மைதானத்தில் இடம்பெற்றது.

பிறேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் வங்கியலாளர் எம்.எம்.மசூத்தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதமஅதிதியாக கலந்து கொண்டு சுற்றுப்போட்டியின் ஆரம்ப போட்டிகளை வைபவ ரீதியாகஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், அஸ்லம் பிக் மார்ட்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ.அஸ்லம் றியாஜ், விளையாட்டுத்துறைபிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டனர்.

ஆரம்ப போட்டியில் சம்மாந்துறை முபோ விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மருதமுனைபிறைட் பியுச்ச விளையாட்டுக் கழகமும் கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்தைஎதிர்த்து சம்மாந்துறை எஸ்.எஸ்.சீ விளையாட்டுக் கழகமும் மோதியது.

இதில் சம்மாந்துறை முபோ விளையாட்டுக் கழகம் 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றதுடன்மற்றைய போட்டியில் கல்முனை றினோன் விளையாட்டுக் கழகம் 4 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -