நாமலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல - மஹிந்த சமரசிங்க

நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் அல்ல என தொழிற் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்ட பின்னரே கைதுகள் இடம்பெறுகின்றன என அவர் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமின்றி கைதுசெய்யப்படுபவர்கள் எந்தவித தண்டனைகளும் இன்றி விடுதலை செய்யப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை தற்போது நீதித்துறையானது சுதந்திரமாக செயற்படுகின்றது. அதற்கான சரியான அடித்தளத்தை அரசாங்கம் அமைத்துக் கொடுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -