ஹெரோய்ன் போதைப்பொருள் வர்த்தகரான வெலா சுதாவின் குற்றங்கள் தொடர்பில் புதிய விசாரணைகள் முன்னெடுப்படவுள்ளன. இதனடிப்படையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குற்றப்புலனாய்வு துறையினர் இந்த விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இதன்படி முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு வீடு ஒன்றை அமைக்க வெலே சுதா பணம் வழங்கியமை மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் வெலே சுதாவுக்கு இருந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஏனையய குற்றத்தொடர்பு என்பன தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.