”நிழல் அமைச்சரவையில் தனது பெயரும் இடம்பெற்றிருப்பது குறித்து தான் எதனையும் அறிந்திருக்கவில்லை”

நிழல் அமைச்சரவையில் தனது பெயரும் இடம்பெற்றிருப்பது குறித்து தான் எதனையும் அறிந்திருக்கவில்லை என, பாராளுமன்ற உறுப்பினர் லோஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார். 

நேற்றையதினம் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால், நிழல் அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதோடு, அதில் நகரமைப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக லோஹான் ரத்வத்த தெரிவாகியுள்ளார். 

எதுஎவ்வாறு இருப்பினும், நிழல் அமைச்சரவை நியமனம் மற்றும் தனது பெயரும் அதிலுள்ள என்பது குறித்து தான் ஊடகங்கள் மூலமே தெரிந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.  மேலும், இந்த அமைச்சரவை யாரால் நியமிக்கப்பட்டது என்பது குறித்தும் தான் அறிந்திருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

எனவே தன்னை அதிலிருந்து நீக்குமாறு கோரியுள்ளதாகவும் லோஹான் ரத்வத்த இதன்போது குறிப்பிட்டுள்ளார்.  இதேவேளை, பொது எதிரணியாக அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தான் தொடர்ந்தும் இணைந்திருப்பதாகவும் அவர், அத தெரணவிடம் கருத்து வௌியிடுகையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -