திருகோணமலையில் சட்டவிரோத துப்பாக்கி..

எப்.முபாரக்-

திருகோணமலை- வெல்கம விகாரை பகுதியில் சட்ட விரோதமான முறையில் இரண்டு துப்பாக்கிகளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஞாயிற்றுக்கிழமை (17) இரவு முன்னாள் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வெல்கம் விகாரை-விகாரை வீதியைச்சேர்ந்த கொடித்துவக்கு ஆராய்ச்சிலாகே சுரத்திமல (31வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது- உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மாலை கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு சென்று சோதனையை மேற்கொண்டபோது டி -56 துப்பாக்கியொன்றும் – கட்டுத்துவக்கும் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் முன்னாள் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று திங்கட்கிழமை (18) திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -