எஸ்.அஷ்ரப்கான்-
நிரந்தர சமாதானத்தையும், தேசிய நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தலில் ஊடகங்களின் வகுபங்கு எனும் தொனிப் பொருளில் சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் பயிற்சி நெறி இன்று (30) கல்முனை சூப்பர் ஸ்டார் ஹோட்டலில் ஆரம்பமானது.
இந்த கருத்தரங்கு (30,31) ஆகிய இரு தினங்களுக்கும் வதிவிட பயிற்சி நெறியாக இடம் பெறுகின்றது.
இங்கு வளவாளர்களாக அமைப்பின் சட்டத்தரணிகளான கே.ஐங்கரன், செல்வி ஸப்றா ஆகியோர்களால் சிறப்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இதில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.