காதலியை பார்க்க புர்கா அணிந்து விமான நிலையத்தில் நின்ற காதலன் கைது..!

முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா அணிந்து விமான நிலையத்தில் நின்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இளைஞரின் காதலி வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்துள்ளார்.

விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் இடத்தில் இந்த இளைஞர் புர்கா அணிந்து காத்து கொண்டிருந்துள்ளார்.

புர்கா அணிந்திருக்கும் நபர் மீது சந்தேகம் கொண்ட பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அவரை கைது செய்து விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் இளைஞரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வரும் தனது காதலியை ஆச்சரியப்படுத்துவதற்காக தான் புர்கா அணிந்து வந்ததாக இளைஞர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட நபர் கொழும்பு 12 ஐ சேர்ந்த 30 வயது முஸ்லிம் இளைஞர் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -