தோப்பூரில் ஆயுர்வேத வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டி வைப்பு..!

5.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள திருகோணமலை தோப்பூர் ஆயுர்வேத வைத்தியசாலைக்கான அடிக்கல்லை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், இன்று ஞாயிற்றுக்கிழமை (31) நாட்டி வைத்தார்.

திருகோணமலை மாவட்டத்தின் சுகாதார திட்டங்களை ஆரம்பித்து வைக்குமுகமாகவும் சுகாதார அமைச்சால் நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களைம' திறந்து வைக்குமுகமாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்ஆ.எம். நஸரின் வேண்டுகோளுக்கிணங்கவே கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆ.ஐ.மன்சூர் திருகோணமலை மாவட்டநாடளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், கிழக்கு மாகாண சபை உறுபினர்களான சட்டத்தரணி ஜே.எம்.லாகிர், ஆர்.எம். அன்வர் முன்னால் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.ஹரிஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்கள் உயர் அதிகாரிகள், பணிப்பாளார்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள உள்ளுராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -