குசல் பெரேராவிற்கு நஷ்டஈடு - ஐ.சி.சி

லங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட் காப்பாளருமான குசல் ஜனித் பெரேராவிற்கு நஷ்டஈடு வழங்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதாலாவது தடவையாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்த சந்திப்பு ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் குசல் பெரேராவிற்கு எதிராக ஊக்கமருந்து குற்றச்சாட்டின் பேரில் தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும் கடந்த மே மாதம் சர்வதேச கிரிக்கெட் வாரியம் குசல் பெரோவிற்கு எதிரான தடையை நீக்கியிருந்தது.

இந்நிலையில் குசல் பெரேராவின் பரிசோதனைக்கு இலங்கை கிரிக்கெட் சபையினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் பவுண்டுகளை நஷ்டஈடாக வழங்கும்படி இலங்கை கிரிக்கெட் சபை கோரியிருந்தது.

குறித்த நஷ்டஈட்டினை சர்வதேச கிரிக்கெட் வரியம் வழங்க முன்வந்துள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -