போக்குவரத்துப் பொலிஸாரால் வழங்கப்படும் தண்டப்பணம் செலுத்துவதற்கான காலம் நீடிப்பு...!

போக்குவரத்து சமிக்ஞைகளை மீறும், அனுமதிப்பத்திரங்கள் இன்றி வாகனங்கள் செலுத்துவோருக்கு எதிராக போக்குவரத்துப் பொலிஸாரால் வழங்கப்படும் தண்டப்பணம் செலுத்துவதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 14 நாட்களே வழங்கப்படுவதாகவும், அதனை 30 நாட்களாக அதிகரிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பிரதிபொலிஸ்மா அதிபர் ஜீ.டீ.ஏ.சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையிலிருந்து புறக்கோட்டை வரை பஸ்கள் பயணிப்பதற்கு தனியான பாதை ஒன்றையும் ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து ஒழுங்குமீறும் சாரதிகளுக்கு தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு!

போக்குவரத்து ஒழுங்குகளை மீறும் சாரதிகளுக்கு தண்டப்பணத்தை செலுத்தும் காலம்நீடிக்கப்படவுள்ளது. இதுவரைக்காலமும் தண்டப்பணம் செலுத்துவதற்கான காலம் 14 நாட்களாக இருந்தன. புதிய முறையின்படி அது 30 நாட்களாக நீடிக்கப்படவுள்ளது.

இதேவேளை விபத்துக்களின்போது காயங்களை ஏற்படுத்தும் அல்லது பொது சொத்துக்களுக்குசேதம் விளைவிக்கும் சாரதி ஒருவர், தமது தண்டப்பணத்தை தாம் விரும்பிய நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் பிரசன்னமாகாது, பதிவாளரிடம் செலுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை குற்றங்களை தடுப்பதற்காக அனைத்து நகரங்களிலும் சீ.சீ.டிவி கமராக்கள்பொருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -