தானாடா விட்டாலும் வலதுசாரிகளின் தசை ஆடும்! மியூனிச் தாக்குதலை சாட்டாக வைத்து, மீண்டும் ஒரு தடவை இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் ரவுண்டு கட்டித் தாக்குவதற்கு தயாராக இருந்த பேஸ்புக்கின் "மனித உரிமைப் போராளிகள்" திடீரென மௌனமாகி விட்டார்கள். அதற்குக் காரணம் கொலையாளி ஒரு தீவிர வலதுசாரி!
மியூனிச் நகரில் வலதுசாரி பயங்கரவாதியின் கொலைவெறித் தாக்குதலுக்கு பலியானவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு இளைஞர்கள். மூன்று கொசோவோ - அல்பேனியர்கள், இரண்டு துருக்கியர்கள்.... கொலையாளி தனது இடத்தையும், பலியாட்களையும் தெரிவு செய்துள்ளான். அவர்களை அங்கு வருமாறு பேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்துள்ளான்.
கடந்த ஒரு வருட காலமாகவே கொலையாளி தன்னைத் தயார்ப் படுத்தி வந்துள்ளான். துப்பாக்கிச் சூட்டுக் காட்சிகளை கொண்ட வீடியோ கேம்கள் பார்ப்பதை பொழுதுபோக்காக கொண்டிருந்தான். அத்துடன் மனநிலை பாதிக்கப் பட்டவனாகவும் இருந்துள்ளான். கொலையாளி ஓர் அறிக்கை எழுதி வைத்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. ஆனால், இன்னும் வெளிவிடவில்லை.