மஹிந்த குழுவிலிருந்து இருவர் மைத்திரியின் பக்கம்...?

கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ குழுவின் இரு உறுப்பினர்கள் வெளியேற தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிபால கம்லத் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோரே கூட்டு எதிர்க் கட்சியின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

கண்டியில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள நடைபவனியை நடாத்துவது தொடர்பில் பத்தரமுல்லையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்திலும் இவர்கள் கலந்துகொள்ளவில்லையென குறிப்பிடப்படுகின்றது.

இவர்களின் வருகையின்மை குறித்து கடந்த பத்தரமுல்லைக் கூட்டத்தில் பேசப்பட்டதாகவும், இவர்கள் எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக மஹிந்த குழுவிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -