கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள மஹிந்த ராஜபக்ஷ குழுவின் இரு உறுப்பினர்கள் வெளியேற தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிபால கம்லத் மற்றும் பிரேமலால் ஜயசேகர ஆகியோரே கூட்டு எதிர்க் கட்சியின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.
கண்டியில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள நடைபவனியை நடாத்துவது தொடர்பில் பத்தரமுல்லையில் நடைபெற்ற முக்கிய கூட்டத்திலும் இவர்கள் கலந்துகொள்ளவில்லையென குறிப்பிடப்படுகின்றது.
இவர்களின் வருகையின்மை குறித்து கடந்த பத்தரமுல்லைக் கூட்டத்தில் பேசப்பட்டதாகவும், இவர்கள் எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக மஹிந்த குழுவிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் அறிவித்துள்ளன.