ஊரழிகிறது...சீக்கிரமாய் காப்பதற்கு கற்கள் இருக்கின்றதா கொண்டுவந்து கொட்டுங்கள்.....



ஜே.வஹாப்தீன்-
சொற்கள் இனித் தேவையில்லை
இருக்கின்ற
சில அங்குலங்களை
சீக்கிரமாய் காப்பதற்கு.
கற்கள் இருக்கின்றதா
கொண்டுவந்து கொட்டுங்கள்..


தொடர்ந்து
இந்த மண்ணுக்கு
அறுவைச்சிகிச்சைதான்
ஆதலால்
செத்துப் பிழைக்கும் மண்ணுக்கு
கல்லறை செய்ய
கற்களைத்தான் கொட்டுங்கள்.

இந்த வரிகளை
சொல்லி அழவும் முடியவில்லை
கவிதை கற்பூரமானால்
கழுதைகள் மிதிக்கிறது.

இருந்தாலும்
எத்தனையோ பொய்யைச்சொல்லி
வாக்கு மூடை சுமந்தோரே
தந்த வாக்குகள் போதும்
வந்து மண்ணைக்காக்க
ஒரு உண்மை சொல்லமாட்டீரா?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -