உதயன் கம்மன்பிலவுக்கு எச்சரிக்கை...!

வாய்மூல வினா விடை நேரத்தின் போது இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேராவிடம் போதை பொருள் தொடர்பான கேள்விகளை பாராளுமன்ற உறுப்பினர் உதயன் கம்மன்பில கேட்டிருந்தார்.

எனினும், குறித்த கேள்விகளால் சிறப்புரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதன்போது அவமதிப்பவர்கள் பாராளுமன்றத்திற்கு தகுதியற்றவர்கள் என சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பிலவை எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த கேள்விகளை ஹன்சாட்டில் இருந்து அகற்றுமாறும், பொருத்தமற்ற கேள்விகளை எழுப்ப வேண்டாம் எனவும் சபாநாயகர் உதயகம்மன்பிலவுக்கு அறிவுறுத்தியுள்ளார். (ஸ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -