ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஐந்து ஆண்டு காலப்பகுதிக்கு ஒன்றிணைந்து செயற்படுவது என்ற புரிந்துணர்வு உடன்படிக்கையில் இரண்டு கட்சிகளும் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் இரண்டு பிரதான கட்சிகளும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றிணைந்து செயற்படுவது என்பது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தன.
இந்த உடன்படிக்கையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பது என கட்சிகள் இணங்கியுள்ளன.