மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் வங்கி தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் - சாய்ந்தமருது நற்பணி மன்றம் நன்றி தெரிவிப்பு

எஸ்.அஷ்ரப்கான்-
ட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் மிக நீண்ட காலமாக பிரயாணிகளுக்கு இருந்து வந்த குறையான வங்கி தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தினை கொமர்ஷல் வங்கி மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் கடந்த வாரம் பொருத்தியமையால் ஆயிரக்கணக்கான பிரயாணிகள் நன்மையடைந்துவருகின்றனர்.

இந்த இயந்திரத்தினை பொருத்தித் தரும்படி கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளருக்கு சாய்ந்தமருது சுபீட்சம் நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஐ.எம். அன்ஸார் கையொப்பமிட்டு கடந்த 2014.09.28 அன்று மகஜர் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை கருத்திலெடுத்து செயற்பட்டு குறை தீர்த்தமைக்காக குறித்த அமைப்புக்கும், கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளருக்கும் பிரயாணிகளும் பிரதேசவாசிகளும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

மிக நீண்டகாலமாக மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் ஊடாக பயணிக்கும் பிரயாணிகள் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இதனை கருத்தில் கொண்டு சாய்ந்தமருது சுபீட்சம் நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஐ.எம். அன்ஸார் மகஜரை அனுப்பியதுடன், பலமுறை தொடர்பு கொண்டும் நேரடியாகவும் கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரிடம் இவ்வேண்டுகோளை விடுத்திருந்தார்.

கொமர்ஷல் வங்கியானது புகையிரத பிரயாணிகளின் நன்மைகருதி கெழும்பு கோட்டை, மருதானை, ராகம, கம்பஹா, வெயங்கொட, கணேமுல்ல, பொல்கஹவெல, கண்டி, பாணந்துறை, மொறட்டுவ, காலி, கந்தான, கிளிநொச்சி ஆகிய புகையிரத நிலையங்களில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தினை (ஏ.ரீ.எம்.) பொருத்தியிருந்ததுடன் தற்போது மட்டக்களப்பிலும் அந்த சேவையை செய்துள்ளது.

இதற்காக கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளருக்கும், மட்டக்களப்பு கொமர்ஷல் வங்கி கிளையின் முகாமையாளருக்கும், புகையிரத திணைக்கள உயர் அதிகாரிகளுக்கும் சாய்ந்தமருது சுபீட்சம் நற்பணி மன்றம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -