கல்வி அமைச்சர் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம்...!

எப்.முபாரக்-
ல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், எதிர்வரும் வியாழக்கிழமை (28) திருகோணமலை மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார் என கிண்ணியா வலயக் கல்வி அலுவலக திட்டமிடல் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிக் கலிவிப் பணிப்பாளர் எம்.சி.நசார் தெரிவித்தார்.

அன்றைய தினம் கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை சிறாச் மகா வித்தியாலயம், முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி, கிண்ணியா அல் இர்பான் மகா வித்தியாலயம், வான்எல புஹாரி வித்தியாலயம் ,ஆகியற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.

இந்த வைபவங்களில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்,ரீ.எம்.நிசாம், ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணான்டோ உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் தொரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -